சோயா பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் பாசுமதி அரிசி எடுத்து அலசி ஊறவைத்து கொள்ளவும்.
- 2
சோயா எடுத்து அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அதை பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- 3
அதனுடன் தயிர்,மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/2 ஸ்பூன் உப்பு,சிறிது புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
- 4
ஒரு ஜாரில் 5 சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு,1 பச்சைமிளகாய் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து கொர கொரபாக அரைத்துக்கொள்ளவும்
- 5
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பிரியாணி மசாலா அனைத்தையும் சேர்த்து நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
- 6
தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் ஊறிய சோயா சேர்த்து வதக்கவும்.1 ஸ்பூன் மிளகாய் தூள்,1 ஸ்பூன் மல்லி தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா,தேவையான அளவு உப்பு சேர்த்து,ஒரு காய் நறுக்கிய மல்லி,புதினா சேர்க்கவும்.
- 7
சோயா வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.30 நிமிடம் ஊறிய அரிசி சேர்க்கவும்.3 விசில் விடவும்.மிதமான தீயில் வைக்கவும்.
- 8
சோயா பிரியாணி தயார் !!!
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்