பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#sambarrasam
கத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.

பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆

#sambarrasam
கத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2கப் துவரம்பருப்பு
  2. 1/4ஸ்பூன் விளக்கெண்ணெய்
  3. 1/4மஞ்சள் தூள்
  4. 5கத்தரிக்காய்
  5. 1 முழு பூண்டு
  6. 10சிறிய வெங்காயம்
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  9. 3 டீஸ்பூன் சாம்பார் தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. தாளிக்க
  12. 1ஸ்பூன் எண்ணெய்
  13. 1/2 ஸ்பூன் கடுகு
  14. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  15. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  16. 2வர மிளகாய் கிள்ளியது
  17. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரை கப் துவரம் பருப்பை கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். அதில் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் அல்லது பருப்பு நன்கு குழைய வேகவைக்கவும். கத்திரிக்காயை படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். நீளவாக்கில் அரியாமல் குறுக்கு வாக்கில் அரியவும். ஒரு முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் இரண்டு இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு பூண்டு பல்கலை சேர்த்து சிறிது வதக்கவும். சிவக்க வதக்க வேண்டாம். வாசம் வந்தால் போதும். பிறகு அதில் மூன்று ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.பிறகு கத்திரிக்காயை சேர்த்து கொள்ளவும். சிறிது வதக்கவும்.(கத்தரிக்காயை எப்பொழுதும் அரிசி கழுவிய தண்ணீர் அரிந்து போட்டால் கருக்காது. மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் காயை வேக வைத்தால் சுவை கூடும்.)

  3. 3

    மிதக்கும் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து(சுமார் ஒரு டம்ளர் அளவு தண்ணீர்) காயை வேக விடவும். கத்தரிக்காய் வெந்த பிறகு நன்கு வேக வைத்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இந்த குழம்பிற்கு காரம் அதிகமாகவும் புளி குறைவாகவும் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

  4. 4

    புளி தண்ணீர் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும் தேவையென்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத் தூள் வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

  5. 5

    சாதத்தில் பூண்டு கத்தரி காயுடன் சாம்பாரை ஊற்றி கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes