ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.

ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. ஒரு கப் ஆரிய மாவு
  2. 5 கப் தண்ணீர்
  3. தயிர் அல்லது மோர்
  4. தேவையானஅளவு உப்பு
  5. பத்து சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. கொஞ்சம்கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    5 கப் தண்ணீரில் ஒரு கப் அளவு ஆரிய மாவு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி இதை அடுப்பில் சிறிய தீயில் வைத்து ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். கூழ் கொஞ்சம் கெட்டியாக ஆரம்பித்தவுடன் தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்

  2. 2

    15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். அவ்வப்போது கரண்டி கொண்டு கிளறி விடவும்..நன்கு வேக ஆரம்பித்தவுடன் மாவு வாசனை நன்றாக வரும் மேலும் கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாது. இப்போது அடுப்பை நிறுத்தி விடவும். தங்களுக்கு தேவையான அளவு மோர் அல்லது தயிர் எடுத்து வைத்துக் கொள்ளவும். கூழை தேவையான அளவு ஒரு தனி கப்பில் எடுத்துக்கொண்டு தயிரை ஊற்றி அல்லது மோரை ஊற்றி கலக்கவும். கட்டி இல்லாமல் உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் கரைத்த உப்பு சேர்த்து கலக்கி விட்டு குடிக்கலாம்.கெட்டியாக களியாகவே வைத்திருந்து அதில் முருங்கைக்கீரை குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். எந்த காலத்திற்கும் ஏற்ற கூழ். சர்க்கரை நோயாளிகள் கரைத்து குடிக்காமல் கெட்டியாக குழம்பு அல்லது தயிர் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். தனியாக கரைத்துக் குடித்தால் சர்க்கரை அளவு உயரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes