நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#SA
நவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)

#SA
நவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
8 பேர்
  1. 1 கப்வெண் புழுங்கலரிசி (பச்சரிசிக்கு பதில்)
  2. 1/4 கப்து.பருப்பு
  3. 2 டேபிள் ஸ்பூன்பாசிப் பருப்பு
  4. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  5. 1பெரிய தக்காளி
  6. 1பெரிய உருளை கிழங்கு
  7. 12அவரைக்காய்
  8. 1முருங்கைக்காய்
  9. 1வாழைக்காய்
  10. ருசிக்குகல்லுப்பு
  11. வறுக்க:-
  12. 2 டேபிள் ஸ்பூன்தனியா
  13. 1டேபிள் ஸ்பூன்க.பருப்பு
  14. 1/4 டீ ஸ்பூன்மிளகு
  15. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  16. 6சி.மிளகாய்
  17. 10 துண்டுகள்கொப்பரை தேங்காய்
  18. 1 டீ ஸ்பூன்(பெருங்காயத்தூள் அ) கட்டி பெருங்காயம் சிறுகட்டி
  19. 3 ஸ்பூன்நெய்
  20. எலுமிச்சை அளவுபுளி
  21. தாளிக்க:-
  22. 1 டீ ஸ்பூன்கடுகு
  23. 1/2 டீ ஸ்பூன்வெந்தயம்
  24. 1 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள்
  25. 1ஆர்க்குகறிவேப்பிலை
  26. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  27. 1-1/2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  28. 5 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து 10நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

  2. 2

    காய்கறிகளை சுத்தம் செய்து பெரிய துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    குக்கரில், அரிசி, பருப்பு, ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில்,தனியா, மிளகு, சீரகம், மிளகாய், க.பருப்பு, பெருங்காயத் தூள், ஆகியவற்றை கருகாமல், வறுத்து ஆறவிடவும்.

  5. 5

    ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு சற்று அரைபட்டதும், தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.

  6. 6

    புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  7. 7

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் தாளித்து,தக்காளி, ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  8. 8

    அடுத்து நறுக்கின காய்கறிகளை, போட்டு சிறிது வதங்கியதும், சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.

  9. 9

    பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

  10. 10

    கொதித்து புளி வாசனை போனதும், அரைத்த விழுதை, சேர்த்து கொதித்ததும், சாதத்தை போட்டு, ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  11. 11

    பிறகு நறுக்கின கொத்தமல்லி, 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.

  12. 12

    அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  13. 13

    தாளித்ததை, சாதத்தில் போட்டு, மேலே 2 ஸ்பூன் நெய் விட்டு கலந்துக் கொள்ளவும்.

  14. 14

    பிறகு பௌலுக்கு மாற்றி, மேலே கொத்தமல்லி தழையை போடவும்.

  15. 15

    இப்போது, நவராத்திரி 6வது நாள் செய்யும், சுவையான, பிரசாதம்,*கதம்ப சாதம்* தயார். செய்து அசத்துங்கள்.

  16. 16

    குறிப்பு:- மொச்சை, கருப்புக் கொண்டைக்கடலை யை வேகவைத்து, சேர்க்கலாம். தாளிக்கும் போது, 1 ஸ்பூன் காய்ந்த சுண்டைக்காயை வறுத்தும் போடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes