கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி

எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி
எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக கழுவி மிருதுவாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
அடி கனமான பாத்திரத்தில் தக்காளி பச்சை மிளகாய் கலவையை ஊற்றி வேகவிடவும்
- 3
சிறிது நேரத்தில் நிறம் மற்றும் மணம் மாறியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு நறுக்கிய பாதாம் உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து ஜாமில் கொட்டி சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்