பதிர்பேணி(பேணியான்) (Pathirpeni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவுக்குள் வைப்பதற்கு :: பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
- 2
அதில் 200கிராம் நெய் விட்டு நன்றாக நுரைப்பொங்கும் அளவிற்கு கரைத்து கொள்ள வேண்டும்.
- 3
பின் மைதா மாவில் 100கிராம் நெய் சேர்த்து உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10நிமிடம் வைக்க வேண்டும்.
- 4
பின் அவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அரிசி மாவில் புரட்டி, பெரிய பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பூரியை எடுத்து அதன் மேல் கலந்து வைத்திருந்த அரிசி மாவுக் கலவையை வைத்து சுருட்ட வேண்டும்.
- 6
இதேபோல் 3 பூரிகளை அடுக்கி இறுக்கமாக சுருட்டி,6அல்லது8 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 7
அவை ஒவ்வொன்றையும் காயவைத்து ஒவ்வொரு பேணியானாக போட்டு எடுக்க வேண்டும்.
- 8
அதன் மேல் சீனியை தூவி விட்டு பரிமாறவும். அல்லது சீனிப் பாகளில் அமிழ்த்து எடுத்து கொள்ளவும்.சுவையான பதிர்பேணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட் (2)