உருளை கிழங்கு காராமணி குழம்பு

*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.
இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
தட்டைபயிறு நன்மைகள்
இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம்.
உருளை கிழங்கு காராமணி குழம்பு
*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.
இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
தட்டைபயிறு நன்மைகள்
இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காராமணியை சிறிது நேரம் வறுத்து குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2-3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 4
நன்கு கொதி வந்ததும் வேக வைத்த காராமணியை சேர்த்து கொதிக்கவிட்டு உருளைக்கிழங்கு மற்றும் காராமணி வெந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு காராமணி குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)