சமையல் குறிப்புகள்
- 1
பாலை பாத்திரத்தில் சேர்த்து காய்ச்சி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 2
பால் திரிந்தவுடன் ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி இரண்டு மூன்று முறை குளிர்ந்த நீர் விட்டு நன்கு கழுவவும்.
- 3
அனைத்து நீரையும் நன்கு வடித்து விட்டு அரை மணி நேரம் பால் கலவையை தொங்க விடவும் அதிலுள்ள நீர் எல்லாம் இறங்கி கெட்டியாகும் வரை கனமான பொருளை மேலே
வைக்கவும். - 4
பனீர் கலவையை நன்கு உதிர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி மைதா அல்லது சோள மாவு சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு கையால் பிசைய வேண்டும்.
- 5
சப்பாத்தி மாவு போல நன்கு உருட்டி எடுக்கவும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தனியாக வைக்கவும்.
- 6
ஒரு கப் பச்சரிசி 3 கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடவும.
4 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். - 7
சர்க்கரை கரைசல் உடனே உருட்டி வைத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
- 8
15லிருந்து 20 நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும்.
- 9
பனீர் துண்டுகள் இரண்டு மடங்காக அளவில் பெரிதாகி வரும் அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்