சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகள் மூன்று மணி நேரம், கோதுமை ரவைஒரு மணி நேரம் தனியாகவும் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
அங்கு ஊறிய பின் ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் முதலில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இஞ்சி, கருவேப்பிலை, உப்பு இவைகளை லேசாக பொடித்துக் கொள்ளவும்.இப்பொழுது பருப்பு வகைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
கடைசியாக கோதுமை ரவையை சேர்த்து நன்கு அழைக்கவும்.
- 4
இப்பொழுது எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இது புளிக்க வேண்டும் என்று வசியம் இல்ல.முருங்கைக்கீரை அல்லது வெங்காயம் சேர்த்து வார்க்கலாம்.
- 5
தோசை கல்லில் அடையை வார்த்து தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.இது மொறுமொறுப்பான ஒரு கோதுமை ரவை அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ளசாம்பார் தேங்காய் சட்னிநன்றாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716790














கமெண்ட்