காஞ்சிபுரம் இட்லி

#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கலரிசி உளுந்து வெந்தயம் இவை நான்கையும் கழுவி ஒன்றாகவே 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற விடவும்.
- 2
ஊறிய அரிசி வகைகளை கிரைண்டரில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் இதனை 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும். மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொடித்த மிளகு சீரகம் சுக்கு பொடி முந்திரி பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மாவில் சேர்க்கவும்.
- 4
இதனை இட்லி தட்டில் இட்லியை போலவோ அல்லது சிறிய டம்ளர்களில்,கப்பு வகைகளிலும் எண்ணை தடவி வாழை இலை வைத்து மாவை முக்கால் கப்பிற்கு ஊற்றி 15 முதல் 20 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
வெந்த இட்லியை கப்பில் இருந்து ஒரு கத்தியை சைடில் எடுத்துவிட்டு பின்னர் கேக் போல அப்படியே தட்டி எடுத்தா காஞ்சிபுரம் இட்லி தயார்.இதற்கு கார சட்னி என்னை மிளகாய்ப்பொடி மிகவும் அற்புதமான சைட் டிஷ்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்