சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.இரத்தத்தை இரண்டு, மூன்று முறை தண்ணிரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரத்தத்தை போட்டு கட்டியில்லமல் கரைத்து கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 3
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும்.
- 4
கடுகு வெடித்ததும் சிறிய வெங்காயத்தை பச்சை மிளகாய் வர மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள இரத்தத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
அடுப்பை குறைந்த தீயில் வைத்துஅடி பிடிக்காமல் நன்கு வதக்க வேண்டும்.
- 7
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக சுருண்டு வந்ததும் அதன் பிறகு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
- 8
அதன் பிறகு சிறிதளவு மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 9
இப்போது சுவையான ஆட்டு ரத்த பொரியல் தயார் சூடாக பரிமாறவும்.
Top Search in
Similar Recipes
More Recipes





















கமெண்ட்