பெங்காலி ரசமலாய் (Rasamalai Recipe in Tamil)
#golden apron2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
- 2
பால் காய்ச்சி வந்தபிறகு வினிகரை ஊற்றி பாலை திரிய வைக்க வேண்டும். அதனை ஒரு துணியில் வடிகட்டி ஐஸ்வாட்டர் மேலே ஊற்றி பிழிந்து எடுக்க வேண்டும். இந்த பன்னீர் அரை மணி நேரம் ஒரு இடத்தில் தொங்கவிட வேண்டும்.
- 3
அரை மணி நேரம் கழித்து உதிரியான பன்னீரை ஒரு பத்து நிமிடம் தேய்த்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது நமக்கு தேவையான வடிவத்தில் பன்னீரை உருட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 5
ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் எடுத்துக்கொண்டு அதில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
- 6
சர்க்கரை நன்று கொதித்த பிறகு பன்னீர் வட்டங்களை போட வேண்டும். பன்னீர் வருடங்கள் 20 நிமிடம் போல் அதில் வேக வைக்க வேண்டும்.
- 7
பன்னீர் வட்டங்கள் நன்கு பெரிதான பிறகு அதை எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
- 8
இன்னொரு கடாயில் மீதமுள்ள அரை லிட்டர் பாலை எடுத்து காய்ச்சி அது சுண்டி வந்த பிறகு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- 9
குங்குமப்பூ மற்றும் மஞ்சள் கலர் சேர்க்க வேண்டும்.
- 10
அதன் பின் பொடியாக நறுக்கி வைத்த முந்திரி பாதாம் பிஸ்தா சேர்க்க வேண்டும்.
- 11
இப்பொழுது தயாராக உள்ள பாலை பன்னீர் வட்டங்கள் மேல் ஊற்றி பிரிட்ஜில் வைத்து பரிமாற வேண்டும். சுவையான பெங்காலி ரசமலாய் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்