திருநெல்வேலி அல்வா

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முழு கோதுமையை நன்கு அலசி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீரில் கலந்து நன்கு பிசைந்து பால் எடுத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கோதுமை பாலில் இருந்து மேலே உள்ள தெளிந்த நீரை எடுத்து விட்டு கெட்டியான கோதுமை பாலை ஒரு நான்ஸ்டிக் தவாவில் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிண்ட ஆரம்பிக்கவும் சற்று கெட்டி பதம் வந்தவுடன் சக்கரை,நாட்டுச்சக்கரை, பொடித்து வைத்த ஏலக்காய்த்தூள், சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும்.
- 3
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை தேவைக்கேற்ப கோதுமை அல்வாவில் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள நெய் சேர்க்கும் போது அனைத்து நெய்யும் அல்வா உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும்
- 4
அல்வா பதம் வந்தவுடன் உறிஞ்சினேன் சிறிது சிறிதாக வெளியேறும் அல்வாவை சுற்றி நெய் மிதக்கும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 5
சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (4)