மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)

வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன்.
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியுள்ள அளவில் குண்டு மாங்காய் ஏழு அல்லது ஒன்றரை கிலோ குண்டு புளிப்பு மாங்காய் வாங்கிக் கொள்ளவும்.வர மிளகாய் வெந்தயம் கடுகு பெருங்காயத்தூள் உப்பு ஆகிய அனைத்தும் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள படி மாங்காயை அறிந்து வெயிலில் ஒரு வேட்டி துணியில் பரவலாக காயவிடவும். குறைந்தது வெயிலில் 4 டு 6 மணி நேரம் காய விடவும். அத்துடன் வரமிளகாய் கடுகு வெந்தயம், உப்பு அனைத்தையும் காய வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் பொருட்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து விடும். நீண்டநாட்கள் கெடாமல் இருக்கு
- 2
அனைத்தும் காய்ந்தவுடன் தனியாக எடுத்துக் கொள்ளவும்.. ஆறு டம்ளர் அரி ந்த காய்ந்த மாங்காய் துண்டுகளுக்கு ஒரு டம்ளர் அளவு உப்பு தேவைப்படும். உப்பை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் காய்ந்த வரமிளகாயை நைஸாக அரைத்து முக்கால் டம்ளர் அல்லது ஒரு டம்ளர் அவரவர் விருப்பம் ஏற்ப எடுத்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு மட்டும் கடுகு எடுத்துக் கொள்ளவும். மீதி தாளிக்க வேண்டும்.
- 3
குறிப்பு: காய்ந்த உப்பு வெந்தயம் கடுகு மிளகாய் ஆகிவிட்டதை வேண்டுமென்றால் லேசாக வெறும் வானலியில் வறுத்துக் கொள்ளலாம். மிளகாய் தூள் தங்களுடைய காரம் தேவைக்கேற்ப ஒன்று அல்லது முக்கால் டம்ளர் எடுத்துக் கொள்ளவும் போதுமான அளவு இது. நல்ல தரமான நல்லெண்ணையை பயன்படுத்துவோம். அதிக வெந்தயம் சேர்த்தால் லேசாக கசக்கும்.
- 4
அந்த கடுகுடன் நாலு டேபிள் ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் நல்லெண்ணெய் தரமானதாக எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் மாங்காய் துண்டுகளுடன் கலந்து கொள்ளவும். மாங்காய் லேசாக ஈரப்பதத்துடன் தான் இருக்கும் தவறு இல்லை. அனைத்தையும் ஒரு மரக் கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். பிறகு மூடி வைக்கவும். ஒரு நாள் அப்படியே விட்டு விடவும்.
- 5
மறுநாள் பார்த்தால் மாங்காய் தண்ணீர் மற்றும் எண்ணெய் விட்டு இருக்கும். இப்போது மீதி அரை டம்ளர் எண்ணையை வாணலியில் ஊற்றி மீதி உள்ள கடுகு, பெருங்காயம் தாளித்து சூடாக ஊறுகாய் மேல் ஊற்றவும். நன்கு மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு மூடி வைக்கவும். அவை ஆறி யுடன் மாலை நேரம் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பீங்கான் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மட்டும் டேபில் வைத்துக் கொண்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)