* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேறும் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் முழு உளுந்தை கருகாமல் நன்கு சிவக்க வறுத்து ஆறினதும், மிக்ஸியில் மைய அரைக்கவும்.
- 3
பிறகு அரிசிமாவையும் நன்கு வறுத்து ஆறினதும் பெரிய பௌலில் போடவும்.
- 4
க.பருப்பை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
அரிசி மாவுடன், 4 ஸ்பூன் உளுந்து மாவு, தனி மி.தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்,வெண்ணெய், உப்பு போட்டு நன்கு கலந்து தண்ணீரை தெளித்து பிசைந்ததும், ஊறின க.பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து கலக்கவும்.
- 6
எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து காய்ந்ததும், பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, மாவை மெல்லியதாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 7
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கிரிஸ்பி தட்டை* தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட் (2)