சமையல் குறிப்புகள்
- 1
மைதா, ரவா, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து சூடு தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். பின் சப்பாத்தி தேய்ப்பது போன்று தேய்த்து வட்ட வடிவில் உள்ள கப் ஒன்று வைத்து சிறு சிறு பூரி யை தயாரித்து கொள்ளவும். பின் பொரித்து எடுக்கவும்.
- 2
உருளை கிழங்கை வேக வைத்து உப்பு, சாட்மசாலா, பெருங்காயம் தூள், சேர்த்து மசித்து வைத்து கொள்ளவும். ஒரு ஜாரில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். பூரியை மேலே உடைத்து உருளை கிழங்கு, வெங்காயம் வைத்து தண்ணீரில் முக்கி சாப்பிடவும். சுவையான பானி பூரி தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719826









கமெண்ட் (6)