பூரி சென்னா மசாலா
#combo 1
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டக்கடலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 2வெங்காயம் பச்சை மிளகாய் 2 தக்காளியை மட்டும் நறுக்கி வைத்து மீதமுள்ள தக்காளியை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
தேங்காய் சோம்பு மிளகு பூண்டு போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மீதமுள்ள 3 வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை சோம்பு வெந்தயம் தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
- 4
அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி
- 5
அதில் மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து பாதி சுண்டக்கடலை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கி மீதமுள்ள சுண்டக்கடலை சேர்த்து
- 6
பிறகு தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்
- 7
பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பூரி சென்னா மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்