சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளை கிழங்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்தவுடன் பட்டை பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து லேசாக வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கிய உடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வதங்கிய பின்பு அதில் மசித்து வைத்த உருளைக்கிழங்கை, உப்பு சேர்த்து மசாலாவுடன் ஒன்றோடு ஒன்றாக நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
குறைந்த தீயில் வேகவைத்து 5 நிமிடம் கழித்து மல்லி இலை போட்டு இறக்கி வைக்கவும்.
- 7
சூடான உருளைக்கிழங்கு கூட்டு தயார்.
Similar Recipes
More Recipes











கமெண்ட்