கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)

#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..
சமையல் குறிப்புகள்
- 1
இது ஒவ்வொரு ஸ்டெப்பாக தான் செய்ய வேண்டும் மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது.. பாரம்பரிய சுவை வேண்டும் என்றால் பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும் குக்கரில் செய்யக்கூடாது.. ஒரு பாத்திரத்தில் பருப்பை சேர்த்து அது அரைப்பதம் வேகம் அளவு வேக வைக்கவும்..
- 2
பருப்பு அரைப்பதம் வெந்ததும் அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் தேங்காய் துருவியது சேர்த்துக் கொள்ளவும்..
- 3
முருங்கைக்கீரையை உருவி நன்றாக அலசி பொடியாக நறுக்கி வெந்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேக விடவும்..
- 4
அதுவும் ஒரு கொதி வந்ததும் வேக நேரம் எடுக்கும் காய்கறிகளான முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், கருணை கிழங்கு முதலில் சேர்த்து அரைப்பதும் வேக விடவும்..
- 5
அந்த காய்கறிகள் எல்லாம் அரைப்பதும் வெந்ததும் அதனுடன் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய் சேர்த்து வேக விடவும்.. காய்கறிகள் ஒன்றாக கலந்ததும் அதனுடன் அரிசியையும் சேர்க்கவும்..
- 6
அரிசியை சேர்த்து கலந்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும் அது வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும் அதிக தண்ணீர் சேர்த்து கரைக்கக் கூடாது..
- 7
புளி கரைசலை தனியாக எடுத்து வைத்த உடன் மிக்ஸி ஜாரில் அரை கப் வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்
- 8
புளிக்கரைசலுடன் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு மசாலாவும், மிளகாய் தூளும் உப்பும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 9
சாதமும் காய்கறியும் சேர்ந்து முக்கால் பதம் வெந்ததும் அதனுடன் நாம் கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக வேக விடவும்..
- 10
தண்ணீர் வற்றி சாதம் ரெடி ஆனதும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வடகம் தாளித்து சேர்க்கவும் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கி அதையும் சாதத்துடன் சேர்க்கவும்.
- 11
இப்போது சூடான சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு தயார்..
- 12
குறிப்பு: இதில் நீர் காய்கறிகள் எதுவும் சேர்க்கக்கூடாது உதாரணத்திற்கு முள்ளங்கி சௌசௌ அந்த மாதிரி.. அதேபோல் பட்டாணி காலிஃப்ளவர் புடலங்காய் பூசணிக்காய் இதுபோல் காய்கறிகளும் சேர்க்கக்கூடாது..
பாரம்பரிய சுவை வேண்டுமென்றால் மிளகாயை அம்மியில் அரைத்து சேர்க்கும்போது சுவை அருமையாக இருக்கும்.. அதேபோல் இதை மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்தால் தான் ருசி அருமையாக இருக்கும் சிறிது நேரம் எடுக்கும் மற்ற சமையலை விட ஆனால் சுவை அருமையாக இருக்கும்..
Similar Recipes
More Recipes


























கமெண்ட் (5)