சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு சிறிதளவு தேங்காய், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் கொட்டி கலக்கவும். உடன் சிறிதளவு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். இதை அடை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் நன்கு காய்ந்த தோசைக்கல்லில், தோசை ஊற்றி எடுக்கவும். சுவையான அடை தோசை தயார். இதனை தேங்காய் சட்னி அல்லது வெங்காய தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16057253











கமெண்ட்