மசாலா பூரி(masala puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொண்டு அதை மத்து வைத்து மசித்து கொள்ளவும்
- 2
இப்போது ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி பொதினா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு சூடான பிறகு சீரகம் பொடியாக நறுக்கி பெரிய வெங்காயத்தை வதக்கி கொள்ளவும் இப்போது அதனுடன் அரைத்து மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது வதக்கிய மசாலாவுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தனியா தூள் கரம் மசாலா மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் இப்பொழுது மசாலா தயார்
- 6
பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 7
வருத்த பூரியை பொடி செய்து ஒரு தட்டில் போட்டு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை ஊற்றவும்
- 8
இப்பொழுது அதன் மேல் பொறியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி, துருவிய கேரட்டை சேர்க்கவும்
- 9
மேலே ஓம பொடி சேர்க்கவும்
- 10
இப்பொழுது சுவையான மசாலா பூரி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்