சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை மீடியம் சைஸ் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய டிப். நானும் என் கணவரும் வாரத்திற்கு ஒரு முறை பார்லி தண்ணீர் அருந்துவோம்.வேக வைத்த பார்லி தண்ணீரை மேலாக டம்ளரில் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடுவோம். அந்த பார்லியை தூக்கி போடாமல் கூட்டு இந்த மாதிரி கிரேவி வகைகளில் போட்டு சமைத்து விடுவேன்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, கேரட், பட்டாணி இவைகளை லேசாக வேக வைத்துக் கொள்ளவும்.இந்த நேரத்தில் வேகவைத்த பார்லியையும் உப்பையும் சேர்த்துகொதிக்க விடவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி குடைமிளகாயும் சேர்த்து சிறிது வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்க்கவில்லை.
- 5
இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து மிதமான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
இப்பொழுது அருமையான கலவை காய்கறிகள் கிரேவி ரெடி. இது சப்பாத்தி பூரி இவற்றிற்கு உகந்தது. நான் இன்று மேத்தி சப்பாத்தி செய்திருந்தேன் அதற்கு சுவையாக இருந்தது
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)