சமையல் குறிப்புகள்
- 1
பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய், ஜாதிபத்ரி, டீத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் பொட்டலமாகக் கட்டி ஊறவைத்த சன்னாவுடன் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
- 3
ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை சன்னாவை வேக வைத்து வெந்ததும் மசாலா கட்டிய துணி பொட்டலத்தை வெளியே எடுக்கவும்.
- 4
இரண்டு தக்காளி, ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் அரைத்த தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பொடித்த மசாலா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
- 6
வேக வைத்த சன்னா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 7
கொதித்ததும் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 8
சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (4)