மொகல் தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசி அல்லது பாசுமதி அரிசியை கழுவி வடித்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
மட்டனை சுத்தம் செய்து அத்துடன் தயிர் சீரகத்தூள் கறி மசாலா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது ஆகியவை சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் இலவங்கம் மிளகு முந்திரிப்பருப்பு ஆகியவை சேர்த்து பொரிந்ததும் பாதி முந்திரியை எடுத்து வைத்துக்கொண்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரைசேர்த்து வதக்கவும்.
- 4
இப்பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இவை அனைத்தும் நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும் பிறகு ஊறவைத்த மட்டனை அத்துடன் சேர்த்து கொத்தமல்லி புதினா இலை வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து குக்கரில் 4 விசில் விடவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை அளந்து கொதிக்க வைத்து வறுத்த அரிசியை அத்துடன் சேர்த்து குறைந்த தீயில் அரைப் பதம் வேக வைக்கவும்.இப்பொழுது குக்கரில் உள்ள மட்டன் கிரேவி முந்திரி மீதமுள்ள நெய் ஆகியவற்றை இந்த சாதத்துடன் ஆங்காங்கே சேர்த்து கலந்து விடவும்
- 6
இப்பொழுது ஒரு தோசை தவாவை நன்கு சூடேற்றி அதன் மேல் இந்த பிரியாணி கலவையை வைத்து மூடி போட்டு வெயிட் வைத்து தம் வைக்கவும். மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு அரைமணி நேரம் அப்படியே விட்டு விடவும் பிறகு திறந்தால் சுவையான மொகல் தம் பிரியாணி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்