சப்பாத்தி, பன்னீர் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் பட்டை லவங்கம் மட்டும் பிரியாணி இலையை சேர்க்கவும்
- 2
பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் அதனுடன் உப்பு சேர்க்கவும்
- 4
வெங்காயம் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளியை நன்கு வதங்கி கிரேவி பதத்திற்கு வந்த உடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்
- 7
பன்னீரை சிறிது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து கொள்ளவும்
- 8
ஒரு வாணலியில் நெய் சேர்த்து தண்ணீரை மிதமான தீயில் பிரட்டி எடுக்கவும்
- 9
பிறகு பன்னீரை கிரேவியுடன் சேர்க்கவும்
- 10
பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
- 11
கோதுமை மாவுடன்உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்
- 12
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 13
மாவை 20 நிமிடம் மூடி வைக்கவும்
- 14
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையால் வட்ட வடிவமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 15
பிறகு அதை தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
- 16
மிகவும் சுவையான சப்பாத்தி மற்றும் பன்னீர் கிரேவி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (3)