சமையல் குறிப்புகள்
- 1
க. பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து ஆற வைத்து விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பாத்திரத்தில் போட்டு விடவும். பிறகு ஒரு வாணலியில் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
மஞ்சள் தூள் 1ஸ்புன் போட்டு கொதிக்கவிடவும. எண்ணெய் 6ஸ்புன் ஊற்றி கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த பவுடரை புளி தண்ணீர்வுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். புளி காச்சல் ரெடி.
- 4
வடித்த சாதத்தில் எண்ணெய் ஊற்றி ஆறவிடவும். பிறகு புளி காச்சல் போட்டு நன்றாக கலக்கவும். புளி சாதம் ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes














கமெண்ட்