முருங்கை காய் சாம்பார்

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
- 2
குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
- 3
நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும்.
- 4
காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 5
இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 6
புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை சாம்பாரில் சேர்க்கவும்.
- 7
தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும்.
- 8
பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார்... சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்