ஐயர் கஃபே தவல வடை

#hotel
எங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.
இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது.
ஐயர் கஃபே தவல வடை
#hotel
எங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.
இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய அளவுகளில் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். எல்லா பருப்புகளையும் தனி தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். அரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும் தேங்காய்துருவல்,,கடுகு, உளுத்தம்பருப்பு, பெருஙகாயத்தூள் கருவேப்பிலை, நெய் மற்றும் மிளகு எடுத்து கொள்ளவும். வரமிளகாயை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஊறிய அரிசி பருப்புகளில் உள்ள தண்ணீரை ஒட்ட வடித்து கொள்ளவும். முதலில் மிளகாயை தண்ணீர் வடித்து கிரைண்டரில் போட்டு ஓட விடவும்.பிறகு அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.இப்போது கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பை சேர்க்கவும். கொஞ்சமாக பாசி பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதி பருப்பை கிரைண்டரில் சேர்க்கவும். உடன் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும். மாவை கர கரப்பாக அரைக்கவும். தண்ணீர் சிறிது கூட சேர்க்க வேண்டாம். மாவை ஒரு அகண்ட பாத்திரத்தில் வழித்து எடுத்து கொள்ளவும்.
- 3
அரைத்த மாவில் நெய் ஒரு ஸ்பூன் உருக்கி ஊற்றி கொள்ளவும். தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும். விருப்பம் என்றால் இன்னும் கொஞ்சம் தேங்காயை கீனி சேர்த்து கொள்ளலாம். எடுத்து வைத்த பாசி பருப்பு,மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும்.கருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்கவும்.மிளகு சேர்க்கவும்.ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துக் கொள்ளவும். மாவை நன்றாக கலந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடக்கவும்.
- 4
வடை மாவை இலை அல்லது உள்ளங்கையில் மெலிதாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை செய்து எண்ணெயில் போடவும்.வடை எண்ணெயில் மேல் எழும்பும் வரை திருப்ப வேண்டாம்.பிறகு திருப்பி போடவும்.எல்லா புறமும் நன்கு வேக வைத்து சிவக்க விடவும். மிதமான தீயில் வேக விடவும். எண்ணை சத்தம் அடங்கிய பின் அரி கரண்டி கொண்டு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
- 5
வடையை சிவக்க விட்டு எடுக்கவும். சுவையான கரகரப்பான புரத சத்து நிறைந்த மாலை நேர ஹோட்டல் ஸ்டைல் டிஃபன் வீட்டிலேயே தயார். இதற்கு தேங்காய் சட்னி, அல்லது புளி சட்னி சூப்பராக இருக்கும். நான் மதிய வேளை செய்ததால் ரச வடை ஸ்பெஷல் ஆக்கி விட்டேன். ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (3)