கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌

#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். காய்களை நன்கு கழுவி அரிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
சுவையை கூட்டும் மண் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் 4 ஸ்பூன் சமயல் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்து, வெந்தயம் போடவும்.
- 3
கடுகு உளுந்து,வெந்தயம் வனங்கியதும் அதனுடன் 2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் வெங்காயத்துடன் நறுக்கி வைத்துள்ள 6 பற்கள் பூண்டை சேர்த்து வதக்கவும்.பூண்டு பச்சை வாசனை போக வணங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி உடன் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்க்கவும்.
- 6
பின் அதனுடன் முருங்கைக்காய் சேர்த்து அனைத்தையும் நன்கு கிளறி விடவும்.பின் 2 ஸ்பூன் குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கி கிளறி விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- 8
தண்ணீர் ஊற்றிய பிறகு மூடி போட்டு காய்களை வேக விடவும்.புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 9
இப்பொழுது மூடியை நீக்கி குழம்பு நன்கு கொதித்த பின் காய்கள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றவும்.புளி தண்ணீர் ஊற்றிய பிறகு ஒரு கொதி விடவும்.
- 10
குழம்பு கொதி வந்தவுடன் சிறிது வெல்லம் (அல்லது) நாட்டு சர்க்கரை குழம்பில் சேர்க்கவும்.பின் குழம்பில் கடைசியாக 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்ட பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
- 11
நமது மண் சட்டியில் சுவையான அற்புதமான கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் புளி குழம்பு தயார்👌👌👌👌வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍👍நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes


































கமெண்ட் (4)