முரல் மீன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மண் சட்டியில் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், சீரகம், வெந்தயம் வறுத்தது மற்றும் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பிறகு சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கையை வைத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு பேனில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
என்னை நன்கு சூடாக்கிய பிறகு சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு மீன் சேர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 7
மீன் நன்கு வெந்த பிறகு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை தூவி பத்து நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைத்து, பிறகு பரிமாறினால் சுவையான மீன் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்