எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30மணி நேரம்
6-8 பேர்
  1. 1/2கிலோ சீரகசம்பா அரிசி
  2. 1/2கிலோ சிக்கன் (சுத்தம் செய்து கொள்ளவும்)
  3. 5பெரிய வெங்காயம் (மீடியம் சைஸ்),4தக்காளி (மீடியம் சைஸ்)
  4. 1.5டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது
  5. 1.5டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது
  6. 1கை பிடி புதினா இலை, புதினாவில் பாதி அளவு மல்லி இலை
  7. 1/2கப்தயிர்
  8. பாதி எலுமிச்சம் பழம்
  9. 5காஷ்மீர் வத்தல் சுடு நீரில் ஊற வைத்து அரைக்க (காரம் மிக குறைவு)
  10. தேவையானஅளவுஉப்பு
  11. தாளிக்க: 3பட்டை,3ஏலக்காய்,3 பிரியாணி இலை,
  12. 4கிராம்பு,1 மராட்டி மொக்கை,2 அண்ணாச்சி பூ
  13. 3டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய், 3டேபிள்ஸ்பூன் நெய்(தேவைக்கு)
  14. தேவையானஅளவுதயிர் பச்சடி: தயிர், 2பெரிய வெங்காயம்,உப்பு

சமையல் குறிப்புகள்

1.30மணி நேரம்
  1. 1

    அரிசியை 2 முறை கழுவி 30 நிமிடங்கள் ஊற விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க எடுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
    வெங்காயம் வதங்கியதும் அரைத்த மிளகாய் பேஸ்ட் ஐ சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சிக்கன் சேர்க்கவும். (சிக்கன் நன்றாக வேக வைக்க இப்பொழுது சேர்த்து விடுவேன்).நன்றாக கிளறி விடவும். பின்னர் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும்(நான் அரைத்து சேர்த்து உள்ளேன்).தயிர் சேர்க்கவும்.சிக்கன் நன்றாக வதக்கி விட்டால் தான் கவுச்சி வாசம் வராது. நன்கு வேகும். (இப்பொழுது எனக்கு காரம் குறைவாக இருப்பதால் 1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்தேன்)

  5. 5

    சிக்கன்-ல் இருந்து தண்ணீர் வெளியேறி அவை வற்றும் அளவுக்கு மீடியம் தீயில் வைத்து வதக்கவும்.மூடி போட்டு வேக வைக்கவும்.

  6. 6

    தண்ணீர் வற்றியதும் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்(3.5 கப்-க்கு 7 கப் தண்ணீர். ஆனால் சிக்கன், மட்டன் பிரியாணிக்கு 1கப் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.)

  7. 7

    தண்ணீர் நன்றாக கொதித்ததும் உப்பு பார்த்து விட்டு, அரிசியை சேர்க்கவும். அரிசி கொதித்ததும் மறுபடியும் உப்பு பார்த்து,பாதி லெமன் பிழிந்து,மூடி போட்டு வேக விடவும்.

  8. 8

    தண்ணீர் மற்றும் அரிசி சம நிலைக்கு வரும்போது,கடாயை சிறு அடுப்புக்கு மாற்றி, சிறு தீயில், தோசை கல் வைத்து, அதன் மேல் கடாயை வைக்கவும். நான்
    தண்ணீர் நன்றாக சூடு செய்து, அந்த பானை-யை கடாயின் மேல் தம் போட பயன் படுத்தி உள்ளேன்.

  9. 9

    25 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து விட்டு, 20 நிமிடங்கள் மூடி யை திறக்காமல் வைத்து விட்டேன்.

  10. 10

    பின்னர் திறந்து பார்த்தால்,அடி பிடிக்காத குழையாத,சுவையான தம் பிரியாணி ரெடி.

    குறிப்பு: இந்த செய்முறை-ல்,எடுத்துக் கொண்ட வர மிளகாய் பேஸ்ட் காரம் மிக குறைவு. (குழந்தை களுக்கான காரம்).எனவே காரம் விரும்பிகள் 10காஷ்மிரி மிளகாய் ஊற வைத்து அரைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes