சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.
- 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், பூண்டு பல், சீரகம், கால் ஸ்பூன் சோம்பு போட்டு அரைக்கவும்.
- 3
பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்பை தண்ணீர் வடித்து விட்டு அதில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 4
அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை, உருண்டைக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் போட்டு ஒன்று சேர்த்து பிசையவும்.
- 5
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 6
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சோம்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 7
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
- 8
பிறகு ஊற வைத்த புளியை கரைத்து அதில் ஊற்றி மிளகாய் தூள் மல்லித் தூள் போடவும்.
- 9
பிறகு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.குழம்பு கொதி வந்தவுடன் வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- 10
பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பரிமாறவும்.
- 11
சுவையான பருப்பு உருண்டை குழம்பு.
Similar Recipes
More Recipes


































கமெண்ட்