சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட்டு தண்ணீரை வடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து எடுத்து ஆறவிடவும்.
- 2
படத்தில் காட்டியவாறு பலாக்காயை நறுக்கி கழுவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயை சூடேற்றி அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதனோடு முந்திரிப் பருப்பையும் சேர்த்து தாளித்து கொண்டு வேகவைத்த பலாக்காயை இதனுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும்.
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தயிர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
- 5
இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கிளறிக்
கொள்ளவும். - 6
ஒரு அடிகனமான பாத்திரத்தை பலாக்காயில் கலவையை சேர்த்து அதன் மேல் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து மீண்டும் இதேபோல் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக பொரித்த வெங்காயம் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.
- 7
ஒரு தோசைக்கல்லை குறைவான தீயில் அடுப்பில் வைத்து சூடேற்றி அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து தட்டு போட்டு மூடி அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து பாலில் ஊரவைத்த குங்குமப்பூவை சிறிதாக தெளித்து பரிமாறினாள் சுவையான வெஜிடேபிள் தம் பிரியாணி தயார்.
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (2)