கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 nimidangal
4-6 பரிமாறுவது
  1. ½ கப் நெய்
  2. ¼ கப் முந்திரி
  3. 1 மேஜை கரண்டி உலர்ந்த திராட்சை
  4. ½ கப் பெரிய ரவை
  5. 2 மேஜை கரண்டி ஒடுக்கிய பால் (CONDENSED)
  6. 20 இழைகள் குங்குமப்பூ
  7. 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  8. ½ தேக்கரண்டி அதிமதுரம்
  9. ½ தேக்கரண்டி ஜாதிக்காய்
  10. 1 தேக்கரண்டி தேன்

சமையல் குறிப்புகள்

30-40 nimidangal
  1. 1

    ஒரு செக் லிஸ்ட் தயார் பண்ணுங்கள். தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    மிதமான நெருப்பின் மீது வாணலியை வைத்து பாதி நெய்
    ஊற்றி முந்திரி உலர்ந்த திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள், 2 நிமிடங்கள். அந்த நெய்யிலேயே ரவையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள், 3-4 நிமிடங்கள், 2 கப் நீர் ஊற்றி கிளருங்கள்- கட்டி இருக்க கூடாது. ரவை நன்றாக வெந்த பின் சக்கரை சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. சக்கரை உரூகி தள தள வென்று கொதிக்கும். ஒரு சில நிமிடங்களில் எல்லாம் நன்றாக ஒன்று சேரும்.

  3. 3

    அதன் பின்பு பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ (1 தேக்கரண்டி சுடு நீரில் குங்குமப்பூ கலந்தால் நிறம் நன்றாக இருக்கும்), ஏலக்காய் தூள், அதிமதுரம் சேர்த்துக் கிளருங்கள்.

  4. 4

    மீதி பாதி நெய் கூட சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து ஏறக்கி வையுங்கள். கேசரியை கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல்
    இருந்தால் கேசரி தயார்.
    வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரி. மணம் கூட ஜாதிக்காய் தூள் சேர்க்க.
    ருசித்துப் பாருங்கள். இன்னும் கொஞ்சம் இனிப்பு வேண்டுமானால் 1 தேக்கரண்டி தேன் சேர்க்க.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes