சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்து கொள்ளவும். தண்ணீரை லேசாக தெளித்து, தெளித்து மாவு கொரகொரப்பாக வரும் வரை பிசறவும். இரண்டு கைகளையும் கொண்டு பிசறவும். எந்த ஒரு கட்டியும் விழாமல் பதமாக பிசறவும்.
- 2
புட்டு பாத்திரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் கழுத்தளவு ஊற்றி கொதிக்கவிடவும்
- 3
இப்பொழுது மேல் பகுதியில் முதலில் அடிப்பகுதியில் மாவு போடவும், அதன் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் மாவு என மாற்றி மாற்றி அடுக்கவும். மேல் பகுதியை மாவு அடைந்ததும் மூடி போடு மூடவும். இதை கொதிக்கும் குவளை மேல் வைக்கவும்.
- 4
புட்டு பாத்திரத்தின் மேல் பகுதி துவாரத்தில் இருந்து ஆவி வரும் தருவாயில் அடுப்பை அணைக்கவும். ஒரு அகண்ட தட்டில் புட்டை எடுக்கவும். புட்டு பாத்திரத்தின் அடிப்பகுதி வழியாக கீழே புட்டை மெதுவாக தள்ளவும்.
- 5
தேங்காய் துருவல், கருப்பட்டி அல்லது சர்க்கரை, நெய் சேர்த்து பரிமாறவும். இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் கொண்டக்கடலை குழம்பு, பச்சைப்பயிறு அல்லது வாழைப்பழத்துடன் சாப்பிடலாம். காலை உணவிற்கு உகந்த உணவு.
Similar Recipes
More Recipes







கமெண்ட்