பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)

இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர்.
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் புலியை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு,காய்ந்த மல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,தக்காளி, பூண்டு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஊற வைத்த புலியை நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேகவைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
பின்னர் இவற்றில் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் இரண்டு டீஸ்பூன் சக்தி மசாலா பொடி சேர்த்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்துக் கொண்டு கலவையை ஊற்றி முறைக்கூடும் போது இறக்கி விடவும்.அதன் மேல் மல்லித்தழை, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான அட்டகாசமான சுவையில் ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்