சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேவையான பொருட்களை பக்கத்தில் வைக்கவும்.
- 2
வெங்காயம் பச்ச மிளகாய் பொடியாக நறுக்கவும். பூண்டு தட்டிக் கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் சேர்க்காமல் சோம்பு, சீரகம்,மிளகு வெறும் கடாயில் வறுக்கவும். ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
மற்றொரு கடாயில் மீன் மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆரிய பின்பு முள் இல்லாமல் சதையை மட்டும் எடுத்து பிசைந்து கொள்ளவும்.
- 5
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொறிந்தவுடன் வெங்காயம் வதங்கியதும் பச்ச மிளகாய்,வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும்.
- 6
வதங்கிய பின்பு மஞ்சள் தூள் பிசைந்து வைத்த மீனை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் சிறிது நேரம் கலந்து விடவும். அதன் பின்பு அரைத்து வைத்த பொடியை சேர்த்து உதிரியாகும் வரை வதக்கவும்.
- 7
வதங்கிய பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இரக்கவும். அதில் கொஞ்சம் நறுக்கிய மல்லி இலை தூவி மூடி போட்டு வைக்கவும்.
- 8
இப்போது சுவையான மீன் புட்டு தயார்.
Similar Recipes
More Recipes




















கமெண்ட்