தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை.

தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)

#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/4கிலோ அரிசி வேகும் அளவிற்கு நல்ல தரமான கெட்டியான மண்பானை
  2. 1டம்ளர் அல்லது கால் கிலோ புது பச்சரிசி
  3. 1/2லிட்டர் அல்லது மூன்று டம்ளர் அளவு பசும்பால் /பாக்கெட் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பண்டிகைக்கு தேவையான இரண்டு நல்ல தரமான பானைகளை வாங்கிக் கொள்ளவும் தங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தாற்போல் செய்யும் பொங்கல் அளவ ஏற்றார் போல் பானைகளை வாங்கிக் கொள்ளவும். எங்கள் வீட்டில் இருவர் மட்டும் என்பதால் நான் சிறியதாக பானை போல் அல்லாமல் கடைவதற்கும் குழம்பு வைப்பதற்கும் ஏற்றார் போல் பானை வாங்கினேன். பானைய தினமும் இரண்டு மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் வேரு தண்ணீர் மாற்றி வைக்கவும் பிறகு அரிசி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இப்படி ஒரு வாரம் வரை பச்சை மண்வாசம் போக பானையை

  2. 2

    சுத்தம் செய்து கொள்ளவும். பொங்கல் என்று பானையை நன்கு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை கழுவ வேண்டாம். சுத்தம் செய்த பானையில் மூன்று டம்ளர் பாலை ஊற்றி பொங்க காய்ச்சவும்.பிறகு ஊறிய அரிசியை தண்ணீரில் சேர்த்து நிதானமாக கிளறி விடவும். பால் சுண்ட ஆரம்பிக்கும்போது அரிசி கழுவிய தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வேக விடவும்.

  3. 3

    அரிசி பால் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு குழைய வெந்த பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.தட்டு போட்டு மூடி வைக்கவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.கவனமாக பானை உடையாமல் கிளற வேண்டும். பிறகு பானைக்கு திருநீர் பட்டை சந்தன குங்குமம் வைத்து பூஜைக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். சுவையான பால் பொங்கல் பூஜைக்கு தயார். இதற்கு கதம்ப காய் குழம்பு வைத்தேன் இதனுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes