Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#Kerala
சத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி)

Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)

#Kerala
சத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. 1கப் துவரம் பருப்பு
  2. 15சின்ன வெங்காயம்
  3. 2பெரிய சைஸ் பச்சை மிளகாய்
  4. 1தக்காளி
  5. 1/4ஸ்பூன் வெந்தயம்
  6. கட்டிப் பெருங்காயம் கொஞ்சம்
  7. 1/2துண்டு சிகப்பு பூசணிக்காய்
  8. 2கத்தரிக்காய்
  9. 1முருங்கைக்காய்
  10. 1பெரிய சைஸ் சேப்பங்கிழங்கு
  11. 4அவரைக்காய்
  12. 6வெண்டைக்காய்
  13. 1பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  14. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  15. 1/4ஸ்பூன் 1/4ஸ்பூன் வெந்தய தூள்
  16. 1டேபிள்ஸ்பூன் வெல்லம்
  17. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  18. தாளிக்க
  19. 1ஸ்பூன் கடுகு
  20. 2வர மிளகாய்
  21. கொஞ்சம்கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் பருப்பை கழுவி தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2 அல்லது 3 விசில் விட்டு வேக வைக்கவும். பருப்பை குழைய வைக்க வேண்டாம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும் ஒரு தக்காளி அரிந்து வைத்துக் கொள்ளவும் சிறிய மிளகாய் ஆக இருந்தால் 3 பச்சை மிளகாய் அல்லது பெரிய மிளகாய் ஆக இருந்தால் 2 அறிந்து வைத்துக் கொள்ளவும். ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து தண்ணி ஆக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் சிவந்தவுடன் உரித்த சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியவுடன் நீர்க்க கரைத்த வைத்த புளி தண்ணீர், கட்டி பெருங்காயம் சேர்க்கவும். மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். ஒரு மூன்று நிமிடம் புளித் தண்ணீர் கொதித்தவுடன் அதில் முதலில் அரிந்து வைத்த சிவப்பு பூசணிக்காய், முருங்கைக்காய், சேப்பகிழங்கு அவர காய் இவற்றை சேர்க்கவும்.

  3. 3

    மேற்கூறிய காய்கள் கொஞ்சம் வேக விடவும். அதற்குள் ஒரு நான்-ஸ்டிக் தவாவில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள் சேர்த்து லேசாக வறுக்கவும். மனம் வந்தால் போதும். கருக விட்டுவிட வேண்டாம்.

  4. 4

    இப்போது அரிந்து வைத்த கத்திரிக்காயை மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும்.புளித் தண்ணீர் பத்தவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீர் வைத்து சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் வெந்தவுடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும். வேகவிடவும். முதலிலேயே கத்திரிக்காய் சேர்த்தால் குறைந்துவிடும்.வெண்டைக்காய் சேர்த்தால் குழம்பு வளவளவென்று ஆகிவிடும். ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் வறுத்து அரைத்த மிளகாய் தூள் கலவையை சேர்க்கவும். கலந்து விடவும். 3நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். தேவை என்றால் கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தக்காளியை சேர்க்கவும். நன்கு எல்லா காய்களையும் வேகவிடவும். மூடி வைக்க வேண்டாம். நிறம் மாறும்

  6. 6

    இப்போது கால் ஸ்பூன் வெந்தயத்தூள், சுவைக்காக மீண்டும் கால் ஸ்பூன் வரை பெருங்காயத்தூள் சேர்க்கவும். வெல்லம் சேர்க்கவும் ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். இப்போது மூடி போட்டு மூடிவிடவும்.இப்படி செய்வதால் சாம்பார் மிகவும் மணமாக இருக்கும்.

  7. 7

    இன்று எங்கள் வீட்டில் மதிய உணவு முழுக்க முழுக்க கேரளா ஸ்டைல் உணவாகும்.மட்ட அரிசி சாப்பாடு, சத்ய சாம்பார், சேன காய காலன், ரசம், கத்லி பழம், மற்றும் தயிர். அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தது ரசித்து, ருசித்து சாப்பிட்டோம். கேரளாவில் இருந்தது போல் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes