ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ap
ஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன்.

ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)

#ap
ஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 1/2கப் துவரம் பருப்பு
  2. 1/2கப்பிர்க்கும் கொஞ்சம் குறைவாக பாசிப்பருப்பு
  3. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 15சின்ன வெங்காயம் தோலுரித்து
  5. 2பச்சை மிளகாய் இரண்டாக கீறியது
  6. 4அல்லது 5 பூண்டுப்பல்
  7. 1/2பெரிய வெங்காயம்அரிந்தது
  8. 1தக்காளி அரிந்தது
  9. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. 1முருங்கைக்காய் துண்டுகளாக
  11. 1கேரட் துண்டுகளாக
  12. எலுமிச்சை அளவுபுளி
  13. 1.5டீஸ்பூன் வரமிளகாய் தூள்
  14. 1.5டீஸ்பூன் கொத்தமல்லித் தூள
  15. உப்பு தேவையான அளவு
  16. தாளிக்க
  17. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  18. 1ஸ்பூன் கடுகு
  19. 1ஸ்பூன் சீரகம்
  20. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  21. 1/2ஸ்பூன் கடலை பருப்பு
  22. 2வரமிளகாய்
  23. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  24. கொஞ்சம்கருவேப்பிலை
  25. 1டேபிள்ஸ்பூன் நெய்
  26. 1டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி தேவையான நீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெங்காயம், முருங்கைக்காய், தக்காளி,கேரட், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தேவையான பொருட்களில் கூறியபடி அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தேவையான பொருட்களில் கூறியுள்ள தாளிப்பு சாமான்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில்ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடு ஏறியபிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் சிறிது வதங்கிய பின் அதில் காய்கறிகள் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு அதில் ஒன்றரை ஸ்பூன் வரமிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் கொத்தமல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வாசம் வர வதக்கவும்.

  4. 4

    பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காயை நன்கு கொதிக்கவிடவும்.கொஞ்சம் காய் வெந்த பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும். பதினைந்து நிமிடம் வரை நன்கு காயை வேக விடவும். காய் வெந்து சாம்பார் வாசம் நன்றாக வரும்.அப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

  5. 5

    புளியுடன் சேர்த்து சாம்பார் கொதித்த உடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்.அடுப்பை நிறுத்திவிட்டு அரிந்து வைத்த கொத்தமல்லி தழை குழம்பில் சேர்க்கவும்.

  6. 6

    சுவையான ஆந்திரா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் ரெடி. இட்லி, தோசை, பொங்கல், வடை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.நம்மூரில் டிபன் சாம்பார் செய்ய தேங்காய், கொத்தமல்லி மசாலா பொருட்கள் அரைத்துவிட்டு செய்வோம். ஆனால் ஆந்திர சாம்பாரில் அப்படி செய்வது இல்லையாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes