தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 ஒரு மணி நேரம்
6 பேருக்கு
  1. ஒரு கிலோ சீரகச் சம்பா அரிசி
  2. முக்கா கிலோ மட்டன்
  3. 6பெரிய வெங்காயம்
  4. 5தக்காளி
  5. 10 பச்சை மிளகாய்
  6. 10 பட்டை
  7. 10 கிராம்பு
  8. 10 அண்ணாச்சி பூ
  9. சிறிதளவுகடல்பாசி
  10. 5பிரிஞ்சி இலை
  11. 10 ஏலக்காய்
  12. 50 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  13. 50 கிராம் நெய்
  14. 2 முழு தேங்காய்
  15. புதினா
  16. மல்லித்தழை
  17. 100 கிராம் தயிர்
  18. உப்பு
  19. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் அடி கனமான பாத்திரத்தில் 100 கிராம் என்னை 50 கிராம் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை கடல்பாசி இதைப் போட்டு பொன்னிறமாக பொறிக்க வேண்டும் பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வெங்காயம் பொன்னிறமாக மாற வேண்டும் பிறகு ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி மல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு தக்காளியை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்க வேண்டும் சிறிது தயிர் ஊற்றி 2 நிமிடம் பச்சை வாசனை போகும்வரை அப்படியே விட வேண்டும்
    ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை கிராம்பு ஏலக்காய் கடல்பாசி பிரிஞ்சி இலை பத்து பச்சை மிளகாய் இதை அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்

  3. 3

    பிறகு மசாலா நன்கு வதக்கியதும் அதில் நாம் சுத்தம் செய்த மட்டனை சேர்க்கவேண்டும் சிறிதளவு உப்பு அரைத்த மசாலா இரண்டையும் போட்டு ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்

  4. 4

    மட்டன் முக்காவாசி வெந்தபிறகு அதில் தேங்காய்ப் பாலை சேர்க்க வேண்டும் ஒரு கிளாஸ் டம்ளர் அரிசிக்கு ஒன்றரை கிளாஸ் தேங்காய் பால் என்ற கணக்கில் சேர்க்க வேண்டும்
    தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும் நன்கு கொதித்த பிறகு சீரக சம்பா அரிசியை சேர்க்கவேண்டும் அரிசி போட்ட பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவேண்டும் பிறகு 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அரிசி முக்கால் பதம் வேகம் வரை இருக்க வேண்டும்

  5. 5

    இப்போது நம் டம் போட போகிறோம் முக்கால் பதம் வெந்த பிறகு கேஸை சிம்மில் வைத்து விட்டு மேலே ஒரு தட்டை போட்டு மூடிவிட வேண்டும் மூடிய பிறகு அடுப்புக் கரியை நன்கு சூடுபடுத்தி அந்த தட்டின் மேல் போட வேண்டும் ஒரு 20 நிமிஷம் அப்படியே விட வேண்டும்
    20 நிமிஷம் கழித்து திறந்து பார்க்கவேண்டும் மெதுவாக அடியிலிருந்து மேல் கிளற வேண்டும் சுவையான தேங்காய்ப்பால் தம்பிரியாணி ரெடி ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes