மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
week 5
மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

13 மணி நேரம்
10 நபர்கள்
  1. 4 டம்ளர் இட்லி அரிசி
  2. 1 டம்ளர் உளுந்து
  3. 1/2 டம்ளர் மாவு ஜவ்வரிசி
  4. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. தேவையான அளவு உப்பு
  6. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

13 மணி நேரம்
  1. 1

    முதலில் நாலு டம்ளர் இட்லி அரிசியை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு பிறகு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு டம்ளர் உளுந்தை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு உளுந்து முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற விட வேண்டும் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்

  3. 3

    அதேபோல் அரை டம்ளர் மாவு ஜவ்வரிசியையும் ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்

  4. 4

    எல்லாம் நன்றாக ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைக்க வேண்டும் அதற்கு கிரைண்டரில் உளுந்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு அரைத்த உளுந்து கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    பிறகு அரிசியை நாம் அரைக்கலாம் அரிசியுடன் சேர்த்து நாம் ஊற வைத்துள்ள மாவு ஜவ்வரிசியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் அதேபோல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசி ஜவ்வரிசி கலவையையும் நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும்

  7. 7

    அரைத்த பிறகு அந்த மாவையும் நாம் உளுந்து மாவுடன் ஒன்றாக சேர்க்க வேண்டும் அதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்

  8. 8

    உளுந்து மாவு அரிசி மாவு உப்பு எல்லாவற்றையும் நன்றாக 5 நிமிடம் வரை கலக்கவேண்டும்... இட்லி மாவு ஓரளவிற்கு கெட்டியாக தான் இருக்கவேண்டும் மிகவும் தண்ணியாக இருந்தால் இட்லி சரியாக வராது

  9. 9

    அனைத்தையும் கலந்து விட்ட பிறகு நாம் அதனை மூடி வைத்து 8 மணி நேரம் வரை மாவை புளிக்க வைக்க வேண்டும் குளிர்காலமாக இருந்தால் கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்

  10. 10

    எட்டு மணி நேரம் கழித்து திறந்து பாருங்கள் மாவு நன்றாக புளித்து பொங்கி இருக்கும்...இட்லி மாவு தயார்...இப்போது நாம் இட்லியை தயார் செய்யலாம்

  11. 11

    அதற்கு முதலில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன் இட்லி தட்டு சேர்த்து அதன் மேல் இட்லி துணியை வைத்து ஒவ்வொரு குழியிலும் ஒரு ஒரு கரண்டி மாவை சேர்க்கவேண்டும்

  12. 12

    இட்லி தட்டில் உள்ள எல்லா குழிகளிலும் இட்லி மாவை ஊற்றிய பிறகு மூடிவைத்து இட்லி வெந்து ஆவி வெளியே வரும் வரை பொறுத்திருக்கவும்

  13. 13

    இட்லி வெந்துவிட்டதா என்று தெரிந்து கொள்வதற்கு நாம் ஒரு ஸ்பூன் அல்லது கத்தியை வெந்த இட்லியில் சொருகி பார்க்கவேண்டும் இட்லி முழுவதுமாக வெந்து இருந்தால் கத்தியில் மாவு ஒட்டாமல் இருக்கும்

  14. 14

    அப்படி ஒட்ட வில்லை என்றால் இட்லி நன்றாக வெந்து இருக்கும் இப்போது நீங்கள் சூட்டோடு இட்லியை எடுத்து சுட சுட பரிமாறலாம்...மிகவும் மிருதுவான மல்லிகைப்பூ இட்லி சுட சுட தயார் வாங்க சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes