பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#CF1
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம்

பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)

#CF1
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
7 பேர்
  1. 300 கிராம் பெரிய வெங்காயம்
  2. 100 கிராம் சிறிய வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 100 கிராம் பூண்டு
  5. 100 கிராம் இஞ்சி
  6. 300 கிராம் பழுத்த தக்காளி
  7. கைப்பிடி அளவு கொத்த மல்லி
  8. கைப்பிடி அளவு பொதினா
  9. ஒரு கிலோ மட்டன்
  10. 75 கிராம் பட்ட
  11. 50 கிராம் ஏலக்காய்
  12. 10 கிராம் கிராம்பு
  13. 250 மில்லி கடலை எண்ணெய்
  14. 3 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  15. 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  16. 1 மேஜை கரண்டி கரம் மசாலா
  17. 100 மில்லி தயிர்
  18. 2 லிட்டர் தண்ணீர்
  19. 1 கிலோ சீரக சம்பா அரிசி
  20. 1 எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 250 மில்லி கடலை எண்ணெயை ஊற்றிக் கொண்டு அதில் நான்கு பட்டை, 5 ஏலக்காய் மற்றும் கிராம்பு 4 சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பின்பு நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும். பொன் நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்போது சிறிய வெங்காயத்தை அரைத்து இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு நாம் எடுத்த இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை எடுத்து அளவில் பாதியை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம் பொன்னிறமான உடன் இதில் மட்டனை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இப்பொழுது நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    மேலே கூறியுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதுதான் நமக்கு கரம் மசாலா. இந்த பிரியாணிக்கு ஒரு மேஜை கரண்டி போதுமானது.

  5. 5

    மட்டன் வதங்கிய உடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.

  6. 6

    சீரக சம்பா அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மட்டன் வதங்கிய உடன் அரிசி, எலுமிச்சைச் சாறு, உப்பு தேவையானவற்றை சேர்த்து கொண்டு மூடி வைக்கவும்

  7. 7

    நம்முடைய அரிசியும் அதிலுள்ள தண்ணீரை ஒரே அளவில் வரும் பொழுது மீத முள்ள கொத்தமல்லி, புதினா மற்றும் சிறிது நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேலே ஒரு கடாய் மற்றும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து 20 நிமிடம் விட வேண்டும். நம்முடைய சுட சுட தம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes