பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#salna

பிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
8 நபர்
  1. 1 கிலோ சீரகச் சம்பா பிரியாணி அரிசி
  2. 1.25 கிலோ மட்டன்
  3. 300 கிராம் பெரிய வெங்காயம்
  4. 100 கிராம் சின்ன வெங்காயம்
  5. 250 மில்லி ரீபைண்ட் கடலெண்ணெய்
  6. 300 கிராம் தக்காளி
  7. 4 பச்சை மிளகாய்
  8. 1/2 கட்டு புதினா
  9. 1/2 கட்டு மல்லி
  10. 2பெரிய துண்டு பட்டை
  11. 4-5 ஏலக்காய்
  12. 4-5 கிராம்பு
  13. 1பிரியாணி இலை
  14. 1 எலுமிச்சை
  15. 150 மில்லி புளித்த தயிர்
  16. 2 மேஜைக்கரண்டி நெய்
  17. 3 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்/சக்தி மிளகாய்த்தூள்
  18. 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  19. 1 மேஜைக்கரண்டி கரம்மசாலா தூள்
  20. தேவையானஅளவு தண்ணீர் (ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்)
  21. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்‌‌. கறியை நன்கு கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மல்லி மற்றும் புதினா இலைகளை நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு கனமான, அகலமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பெரிய வெங்காயம் பாதி வதங்கியதும் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கவும்.இரண்டு நிமிடங்களில் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

  4. 4

    கூடவே எடுத்து வைத்துள்ள மல்லி மற்றும் புதினா இலைகளை பாதி அளவு மட்டும் சேர்க்கவும். இவற்றை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

  5. 5

    அதன்பின் கரித்துண்டுகளை சேர்த்து இரண்டு மேஜைக்கரண்டி உப்பு சேர்க்கவும். (குறிப்பு:கறி வேகும் போது உப்பு கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் கறி சுவையாக இருக்கும்) அதன்பின் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

  6. 6

    கூடவே மல்லித் தூள் கரம் மசாலா மற்றும் தக்காளி தயிர் இவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடவும். இதனை மூடிவைத்து மிதமான தீயில் தக்காளி மசியும் வரை வேக விடவும். (குறிப்பு:தண்ணீர் சேர்க்காமல் இவ்வாறு வதக்கி சமைப்பதினால் தக்காளி மற்றும் பொடிகளின் சாரு கறியுடன் சேர்ந்து பிரியாணி கூடுதல் சுவையாக இருக்கும்)

  7. 7

    இப்பொழுது மூடியை திறந்து பார்த்தால் மசாலா சிவந்த நிறமாக இருக்கும். அதற்குப்பின் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.

  8. 8

    இப்பொழுது எடுத்து வைத்துள்ள அரிசியை இரண்டு முறை தண்ணீர் சேர்த்து லேசாக கிளறி கழுவி தண்ணீரை ஊற்றிவிட்டு மூன்றாம் தண்ணீரை பிடித்து அரிசியை ஊறவைக்கவும். (குறிப்பு: அதிகமான முறை அரிசியை கழுவினால் அரிசியில் இருக்கக்கூடிய இனிப்புத் தன்மை போய்விடும்).20 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வற்றி கறி 80 சதவிகிதம் வெந்து இருக்கும். இப்பொழுது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விதத்தில் தண்ணீரை கறியுடன் சேர்த்துக் கொள்ளவும். கூடவே எலுமிச்சையை பிழிந்து சாறு சேர்த்துக் கொள்ளவும்.

  9. 9

    தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை நன்கு வடித்து சேர்த்துக் கொள்ளவும்.முதலில் கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து உள்ளோம், இப்போது அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை ருசித்து பார்க்கவும் உப்பு மற்றும் காரம் சிறிது தூக்கலாக இருக்க வேண்டும் அப்போதுதான் அரிசி வெந்த பின் அது சரியாக இருக்கும். மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும் தண்ணீர் மற்றும் அரிசி சம அளவில் வரும் நேரத்தில் நாம் இதை தம் வைக்க வேண்டும். தம் செய்வதற்கு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் சூடு படுத்தவும்.

  10. 10

    தோசைக் கல் சூடானதும் பிரியாணி பாத்திரத்தை அதன் மேல் வைத்து நெய் சேர்க்கவும்.கூடவே மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இதனை மூடி வைத்து அதன் மேல் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து இதன் மேல் வைக்கவும். நம் வேறு எந்தவிதமான கனமான பொருளை யும் இதற்கு மேல் வைக்கலாம். இவ்வாறு செய்வதனால் உள்ளிருந்து ஆவி வெளியே செல்லாமல் நம் பிரியாணி மணத்துடன் இருக்கும்.

  11. 11

    சிறு தீயில் 20 நிமிடங்கள் தம் செய்ய வேண்டும். இடையிடையே திறக்க கூடாது.20 நிமிடம் கழித்து திறந்து லேசாக கிளறி விடவும். இது பச்சரிசி என்பதால் அழுத்தமாக கிளறினால் அரிசி குழைந்துவிடும். அவ்வளவுதான் சுவையும், மணமும், நிறமும் நிறைந்த மட்டன் தம் பிரியாணி தயார் இதனை வெங்காயம் மற்றும் தயிர் சேர்த்த பச்சடி உடன் பரிமாறலாம்.

  12. 12

    குறிப்பு: பிரியாணி செய்வதற்கு கரி இளசாக இருந்தால் அதன் சாறு இறங்கி பிரியாணி சுவையாக இருக்கும். நான் இங்கே இளசான கரி உபயோகித்து உள்ளேன். ஒருவேளை நீங்கள் சிறிது முத்தலான கரியை உபயோகித்தால் அதற்குத் வேக வைக்கும் நேரம் மற்றும் தண்ணீரின் அளவு சிறிது கூடுதலாக தேவைப்படும். கறி வெந்த பின் சேர்க்கும் தண்ணீரில் எந்த அளவு மாற்றமும் கிடையாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes