திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
week 3

திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. அரைக்க
  2. மூன்று சிறிய துண்டு பட்டை
  3. 4கிராம்பு
  4. 3 ஏலக்காய்
  5. 1பெரிய துண்டு இஞ்சி
  6. 15 பல் பூண்டு
  7. பிரியாணி தாளிக்க தேவையானவை
  8. 7 டேபிள் ஸ்பூன் நெய்
  9. 2 சிறிய துண்டு பட்டை
  10. 3 கிராம்பு
  11. 2ஏலக்காய்
  12. 2பிரியாணி இலை
  13. 6முந்திரிப்பருப்பு
  14. 20 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  15. 5 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  16. கையளவு கொத்தமல்லி இலை
  17. 1கையளவு புதினா இலை
  18. ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  19. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  20. 1 டேபிள்ஸ்பூன் அரைத்த பிரியாணி மசாலா
  21. 4 டேபிள் ஸ்பூன் அதிகம் புளிப்பில்லாத தயிர்
  22. தேவையானஅளவு உப்பு
  23. அரை கிலோ மட்டன்
  24. மூணு டம்ளர் சீரக சம்பா அரிசி
  25. தேவையானஅளவு தண்ணீர்
  26. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிரியாணி மசாலா தயாரிப்பதற்காக 3 சிறிய துண்டு பட்டை 4 கிராம்பு 3 ஏலக்காய் ஆகியவற்றை மிதமான தீயில் கருக விடாமல் லேசாக வறுத்து பின்பு ஆற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அரைக்கிலோ மட்டனை எடுத்து இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும்

  3. 3

    முதலில் மட்டனை வேக வைக்க குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி பிறகு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்

  4. 4

    மட்டன் வதங்கியவுடன் அதில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்

  5. 5

    குக்கரில் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும் பின்பு குக்கரில் ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து மட்டன் தனியாகவும் மீதமுள்ள அதன் தண்ணீரை தனியாகவும் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதிலிருக்கும் தண்ணீரை நாம் பிரியாணி செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்

  6. 6

    மூன்று டம்ளர் சீரக சம்பா அரிசியை எடுத்து ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு அரிசி இலேசாக முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  7. 7

    இப்பொழுது பிரியாணி செய்வதற்கு 20 தோலுரித்த சின்ன வெங்காயம் 7 டேபிள்ஸ்பூன் நெய் இரண்டு சிறிய துண்டு பட்டை 2 கிராம்பு 2 ஏலக்காய் 2 பிரியாணி இலை 6 முந்திரி 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது நாலு டேபிள்ஸ்பூன் அதிகம் புளிப்பில்லாத தயிர் ஒரு கையளவு கொத்தமல்லித்தழை ஒரு கை அளவு புதினா இலை ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இவற்றுடன் நாம் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா 1 டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்

  8. 8

    பிரியாணி தாளிப்பதற்கு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 7 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் காய்ந்தபின் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்

  9. 9

    பின்பு ஒரு கையளவு புதினா இலை ஒரு கையளவு கொத்துமல்லி இலையை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து அதனையும் நன்கு வதக்க வேண்டும்

  10. 10

    சின்ன வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்

  11. 11

    பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் மட்டன் வதங்கிய பிறகு அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பிரியாணி மசாலா 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கருக விடாமல் நன்கு வதக்க வேண்டும்

  12. 12

    மசாலாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  13. 13

    மசாலா வதங்கிய பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள்ஸ்பூன் அதிகம் புளிப்பில்லாத தயிரை சேர்த்து வதக்க வேண்டும்

  14. 14

    பின்னர் நாம் எந்த டம்ளரில் அரிசி அளந்து எடுத்துக் கொண்டோமோ அதே டம்ளரில் ஆறு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் மட்டனை முன்னதாகவே வேக வைத்து விட்டதால் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் விகிதம் சரியாக இருக்கும் நாம் அதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம் எனவே மசாலா நன்கு வெந்தவுடன் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்

  15. 15

    மசாலாவுடன் சேர்த்த தண்ணீரில் நன்கு கொதி வந்தவுடன் நாம் ஏற்கனவே தண்ணீரில் ஊற வைத்துள்ள மூன்று டம்ளர் பிரியாணி அரிசியை தண்ணீர் முழுவதும் வடிகட்டி விட்டு கொதிக்கும் மசாலா தண்ணீரில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  16. 16

    ஐந்து நிமிடம் சென்றவுடன் பார்த்தால் நாம் சேர்த்த பிரியாணி அரிசி பாதி அளவு வெந்திருக்கும் அந்த சமயத்தில் மேலும் சிறு கையளவு பொதினா கொத்தமல்லி இலைகளை அதனுடன் சேர்க்க வேண்டும்

  17. 17

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு பிரியாணி பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து விட்டு அடுப்பின் மேல் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து நன்கு மூடி விடவேண்டும் மூடியின் மேல் ஏதாவது ஒரு கனமான பொருளை வைக்க வேண்டும் அடுப்பை குறைந்த அளவு சூட்டில் அதாவது சிம்மில் 10 நிமிடம் வைக்க வேண்டும்

  18. 18

    பிறகு பாத்திரத்தை திறந்து பார்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும் இப்பொழுது அரிசி முக்கால் பாகம் வெந்து இருக்கும் கிளறிவிட்டு மறுபடியும் அதே போல் மூடி வைத்து மூடி மேலே கனமான பாத்திரத்தை வைத்து மேலும் ஒரு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்

  19. 19

    பத்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட்டு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்காமல் அப்படியே ஒரு ஐந்து நிமிடம் விட்டுவிட வேண்டும் 5 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் இதோ மட்டனுடன் மசாலா கலவைகளும் சேர்த்து கமகமக்கும் அசத்தலான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes