கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
week4
பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு‌ தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ மீன்
  2. 4மாங்காய் துண்டுகள்
  3. 1பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  4. 1 தக்காளி
  5. 5டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  6. 10பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  7. 20கருவேப்பிலை
  8. அரைக்க தேவையானவை
  9. 1/2 மூடி துருவிய தேங்காய்
  10. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  11. 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  12. 6சின்ன வெங்காயம்
  13. 5 பல் பூண்டு
  14. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  15. 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  16. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  17. 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  18. தேவையானஅளவு உப்பு
  19. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    அரை‌ கிலோ மீன் துண்டுகளை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்

  3. 3

    மசாலாவை நாம் அரைத்து சேர்க்க வேண்டும்...எனவே மசாலா அரைக்க 1 கப் துருவிய தேங்காய், தோல் உரித்த 6 சின்ன வெங்காயம், தோல் உரித்த 5 பல் பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்

  4. 4

    அதனுடன் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் ஆகியவற்றையும் எடுத்து கொள்ள வேண்டும்

  5. 5

    இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    ஒரு கடாயில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து பிறகு அதில் நாம் ஊற வைத்து உள்ள புலியை நன்றாக‌ தண்ணீரில் கரைத்து புலிக்கரைசலை சேர்க்க வேண்டும்‌

  7. 7

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்துள்ள ஒரு தக்காளியையும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  8. 8

    பிறகு தேவையான அளவு தண்ணீர் (அரிசி களைந்த தண்ணீர் சேர்த்தால் சுவையை அதிகமாக்கும்) சேர்த்து நன்றாக கலக்கி விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்

  9. 9

    5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் மசாலா லேசாக கொதிக்க தொடங்கி இருக்கும்

  10. 10

    10 நிமிடம் கழித்து பார்த்தால் மசாலா நன்றாகக் கொதித்து மசாலாவின் பச்சை வாசனை சிறிதும் இல்லாமல் இருக்கும்

  11. 11

    இந்த சமயத்தில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளையும் நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளையும் சேர்க்க வேண்டும்

  12. 12

    பிறகு 10 கருவேப்பிலை இலைகளை தூவி விட்டு மீண்டும் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்

  13. 13

    10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் மசாலவுடன் சேர்ந்து மீன் துண்டுகளும் மாங்காய் துண்டுகளும் நன்றாக வெந்து இருக்கும்

  14. 14

    இப்போது சுவையான மீன் குழம்பு தயார்....நாம் இந்த சமயத்தில் குழம்பை தாளிக்க‌ வேண்டும்.அதற்கு நாம் வேற ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாகும் வரை பொறுத்திருக்கவும்

  15. 15

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி‌ வைத்திருக்கும்‌ 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க‌ வேண்டும்

  16. 16

    சின்ன வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் அதில் 10 கருவேப்பிலை இலைகளை சேர்த்து தாளிக்க வேண்டும்

  17. 17

    இப்போது தாளித்ததை நாம் மீன் குழம்பில் சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து குழம்பு தயாரானதும் அடுப்பை அனணத்து விடலாம்

  18. 18

    இதோ மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் அனைவருக்கும் பிடிக்கும்‌ அசத்தலான சுவையில் வீடே கமகமக்கும் அரைத்து வைத்த‌மீன் குழம்பு தயார்...சுடு சாதத்துடன் மீன் குழம்பு வேற லெவல்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes