* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)

#queen1
இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1
இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கலரிசி, பச்சரிசி,வெந்தயம்.உளுந்தை ஒரு பாத்திரத்தில் போடவும்.
- 2
பிறகு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து மிக்ஸி ஜாரில், அரிசியுடன், உப்பு போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து, 8 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.
- 3
சிறிய மிக்ஸி ஜாரில், மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- 4
இஞ்சியையும் அரைத்துக் கொள்ளவும்.
- 5
கடாயில், 1 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும்,முந்திரியை சிவக்க வறுத்து தட்டில் வைத்து ஆற விடவும்.
- 6
மீதமுள்ள எண்ணெயில், கடுகு, க.பருப்பு, உ.பருப்பை சிவக்க வறுக்கவும், பொடித்த மிளகு, சீரக, இஞ்சியை வதக்கவும்.
- 7
புளித்த மாவில், நல்லெண்ணெய்,வதக்கினதை போடவும்.பின் வறுத்த முந்திரியை போட்டு மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
- 8
குக்கரில் சிறிது தண்ணீர் காய்ந்ததும்,அடுப்பை மீடியத்தில் வைத்து, டம்ளர்களில், ந.எண்ணெய் தடவி, 3/4 பங்கு மாவை ஊற்றி, மேலே வறுத்த முந்திரியை வைக்வும்.
- 9
குக்கரை மூடி 20 நிமிடம் வேகவிட்டு, குச்சியில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
ஆறினதும், ஸ்பூனால் எடுத்து தட்டில் வைத்து,* கட்* செய்யவும்.இப்போது, சுவையான,,* காஞ்சீபுரம் இட்லி* தயார். செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)
#queen1 ,தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும், கலர்ஃபுல், கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.இதுக்கு தக்காளி சட்னி முதல் எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)
#birthday3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது. Jegadhambal N -
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
மிருதுவான இட்லி
#colours3இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது. Jegadhambal N -
-
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பக்கா கோவில் புளியோதரை
#vattaram7சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும். Jegadhambal N -
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)
#npd1*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*. Jegadhambal N -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
#Kpஇந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
More Recipes
கமெண்ட்