காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram Idly recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி அரிசி, இட்லி அரிசி, உளுந்து சேர்த்து நன்கு கழுவி ஐந்து மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் ஊறிய அரிசி,பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து,உப்பு கலந்து இரவு முழுதும் மூடி வைக்கவும்.
- 4
காலையில் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்.
- 5
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நல்லெண்ணை சேர்த்து கடுகு,முந்திரி,சுக்குப்பொடி, மிளகு,சீரகம் சேர்த்து வதக்கி அரைத்த மாவில் சேர்த்து கலந்து விடவும்.
- 6
கலந்த மாவில்,மேலும் மூன்று ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
அதன் பின்னர் இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், கப் இட்லி கப்பில் முக்கால் பாகம் மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
- 8
பத்து பதினைந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
- 9
இட்லி வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான,மிருதுவான காஞ்சிபுரம் இட்லி சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
-
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steamபுகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி ..... karunamiracle meracil -
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார். ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
More Recipes
கமெண்ட் (6)