அரைக்கீரை தேங்காய் பொரியல்

அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
- 2
தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சிறுக்கீரை மிளகு பொறியல்
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது, கீரை நிறம் மாறாமல் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.. San Samayal -
-
அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் . Karpaga Ramesh -
பத்து நிமிடத்தில் சுவையான சேமியா
1.வானெலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, கடலை பருப்பு, உளுந்து, வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.2.ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்3.பிறகு சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும் பின்னர் ஒரு தட்டை கொண்டு மூடவும்.4. ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும்... இதோ சுவையான சேமியா தயார் !!!!!!!r Sangeetha Shanthi -
புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது. Laxmi Kailash -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
-
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
-
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார் Kalavathi Jayabal -
தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌
#kavithaருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍 Bhanu Vasu -
-
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
கீரைவகை உணவு சிறுக்கீரை மசியல்
சிறுக்கீரை மசியல் 8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்..கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும். விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது வர மிளகாய் சேர்க்க வேண்டாம். தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,வடகம் போட்டு கீரையில் சேர்த்து கொள்ளவும். San Samayal -
பச்சைப்பயறு கடையல் (Pachaipayaru kadaiyal recipe in tamil)
பச்சைப்பயறு கத்திரிக்காய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் அதை நன்கு கடைந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து வதக்கவும் பின் முந்திரி, கசகசா, உடைந்த கடலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதி வந்ததும் தாளித்து இறக்கவும்...... நார்ச்சத்து நிறைந்த பச்சைப்பயறு கடையல் தயார்... Dharshini Karthikeyan -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. Siva Sankari -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
அரைக்கீரை பொரியல்
#arusuvai6#goldenapron3 கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது. உடலுக்கு நல்ல வலுவூட்டும். அரைக் கீரையில் கசப்பு தன்மை உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. A Muthu Kangai
கமெண்ட்