காஞ்சிபுரம் இட்லி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#இட்லி
#book
காஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம்.

காஞ்சிபுரம் இட்லி

#இட்லி
#book
காஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்.
ஐந்து பேர்
  1. புழுங்கலரிசி ஒரு கப்
  2. பச்சரிசி ஒரு கப்
  3. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  4. வெந்தயம் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  9. முந்திரி பருப்பு உடைத்தது 8
  10. மிளகு ஒரு ஸ்பூன்
  11. சீரகம் ஒரு ஸ்பூன்
  12. சுக்குப் பொடி ஒரு ஸ்பூன்
  13. நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன். கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்.
  1. 1

    அரிசிகள் இரண்டையும் கலந்து ஊற வைத்துக் கொள்ளவும்.உளுத்தம்பருப்பை வெந்தயம் சேர்த்து தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஊற வேண்டும். ஊறிய அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் பிறகு இரண்டையும் சேர்த்து கலந்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.o

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து, கடுகு தாளித்து விடவும். கடுகு பொரிந்தவுடன், பச்சை மிளகாய் சேர்க்கவும். ஒன்றிரண்டாக நுணுக்கிய மிளகு சீரகத்தை சேர்க்கவும், பிறகு முந்திரிப் பருப்பை சேர்த்து சிவக்க விடவும். அதன் பிறகு கருவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை நிறுத்திய பின் சுக்குப் பொடி சேர்க்கவும். எல்லாவற்றையும் மாவில் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    சிறிய கப் அல்லது டம்ளர்களில் நெய் தடவி, அரை அளவிற்கு மாவை ஊற்றி, இட்லி தட்டில் வைக்கவும். பின்னர் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி,இட்லி தட்டை வைத்து, மூடி போட்டு வேக விடவும், 20 நிமிடங்கள் வரை வேக வேண்டும். இட்லி வெந்து விட்டதா என்று ஒரு கம்பியில் குத்தி பார்த்து,ஆறவிட்டு ஸ்பூனில் எடுக்கவும். சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். தொட்டுக்கொள்ள சட்னி-சாம்பார், அல்லது பொதினா சட்னி கொத்தமல்லி சட்னி எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தொட்டுக்கொள்ள வடகரி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes